4வது போட்டியில வெற்றிக்கு போராடும் இந்தியா... குறுக்கால மழை வரும்னு சொல்றாங்க!
பிரிஸ்பேன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் துவங்கி நடைபெற்று வருகிறது.
Recommended Video

நேற்றைய போட்டியில் இந்திய அணி 62 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி தடைப்பட்டது.
இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுதினம் 4வது மற்றும் 5வது நாள் போட்டி மழையால் தடைபட அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4வது மற்றும் இறுதிப்போட்டி துவங்கி இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெற்றது. முன்னதாக காப்பாவில் 2வது மற்றும் 4வது நாள் ஆட்டம் மழையால் தடைபடும் என்று வானிலை அறிக்கைகள் தெரிவித்திருந்த நிலையில் நேற்றைய 2வது நாள் ஆட்டம் இந்திய அணி 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தடைபட்டது.

மழை பெய்ய 60% வாய்ப்பு
இந்நிலையில் நாளைய தினம் காப்பாவில் மழை பெய்ய 60 சதவிகிதம் வாய்ப்புகள் உள்ளதாகவும் நாளை மறுதினம் 5வது நாள் ஆட்டத்தின் போது மழை பெய்ய 80 சதவிகிதம் வாய்ப்புகள் உள்ளதாகவும் வானிலை ஆய்வு அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இதையடுத்து அடுத்த 2 தினங்களின் ஆட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

சமநிலையில்
இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. சிட்னியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி டிரா ஆகியுள்ளது. இந்நிலையில், தற்போது பிரிஸ்பேனில் நடைபெற்றுவரும் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

370 ரன்கள் இலக்கு
முதல் இன்னிங்சில் விளையாடியுள்ள ஆஸ்திரேலிய அணி 370 ரன்களை இலக்காக இந்திய அணிக்கு தந்துள்ளது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி வீரர்களும் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 336 ரன்களை அடித்துள்ளனர். முதல் இன்னிங்சில் இந்தியாவைவிட ஆஸ்திரேலியா கூடுதலாக 33 ரன்களை எடுத்துள்ளது. தொடர்ந்து 2வது இன்னிங்சில் ஆடவுள்ளது.


Click it and Unblock the Notifications