சவுதாம்ப்டன்: இந்தியா, ஆப்கானிஸ்தான் போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பில்லை என்று வெளியாகி உள்ள தகவல்கள் ரசிகர்களை குஷியாக்கி இருக்கிறது.
ஐசிசி உலக கோப்பை தொடர் வரலாற்றில், மழையினால் அதிகம் பாதிக்கப் பட்ட தொடராக இந்தாண்டு உலக கோப்பை இருக்கிறது. அதாவது வானிலையால் 4 போட்டிகள் ரத்தாகின. மழையினால் பாதிக்கப்பட்ட போட்டிகளுக்கு மாற்று நாட்களை அறிவிக்க முடியாது என்று ஏற்கனவே ஐசிசி கூறியிருந்தது. அதன்படி, புள்ளிகள் பகிர்ந்து வழங்கப்பட்டன.
குறிப்பாக, முக்கிய போட்டியான இந்தியா, பாகிஸ்தான் மோதிய போட்டியிலும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. ஆனாலும் பின்னர் போட்டி நடந்ததில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தியது.
என்னோட ரெக்கார்டை முறியடிக்க அவரு ஒருத்தருக்கு தான் தில் இருக்கு... யாரை சொல்றீங்க சங்கக்கரா?
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம், சனியன்று சவுதாம்ப்டனில் நடைபெற உள்ளது. போட்டிக்காக, 2 நாட்களாக இந்திய அணி வலைப்பயிற்சி மேற்கொள்ள இருந்தது. ஆனால் மழையின் குறுக்கீடு காரணமாக பயிற்சி பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்நிலையில் சவுதாம்ப்டனில் சனிக்கிழமையன்று இந்திய, ஆப்கானிஸ்தான் போட்டி, மழையால் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்று அங்குள்ள வானிலை மைய தகவல்கள் வெளியாகி உள்ளன. போட்டி தினத்தன்று மழை அளவு பூஜ்ய சதவிகிதமாக இருக்கும் (அதாவது... மழை இல்லை).
வெப்பநிலை அதிகபட்சமாக 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலேயே இருக்கும். குறைந்த பட்சம் 11 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 100 ஓவர்கள் என போட்டியை முழுவதும் காண வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.