கட்டாய நிலையில் இந்தியா
இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மாலை 3.30 மணிக்கு துவங்குகிறது. இதில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. தொடரை இழப்பதை தடுக்க, இந்த டெஸ்டில் தோல்வியை தவிர்க்க வேண்டிய நிர்பந்தத்தில் இந்திய அணி உள்ளது.
பந்த் வருகிறார்
இந்த நிலையில், இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், இந்திய அணிக்காக அறிமுகமாவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. சீனியரான தினேஷ் கார்த்திக் பேட்டிங் மற்றும் கீப்பிங்கில் சரியாக செயல்படாததால், அடுத்த தோனியாக பார்க்கப்படும் பந்த் இந்த டெஸ்டில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் தவான்
அதேபோல், துவக்க ஆட்டக்காரர்களிலும் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். முரளி விஜய்க்கு பதிலாக ஷிகார் தவான் மீண்டும் களமிறக்கப்படலாம். தவானும், ராகுலும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள்.
வருகிறார் பும்ரா
பந்துவீச்சை பொறுத்தவரை, அஸ்வின் மட்டுமே சுழற்பந்து வீச்சாளராக இருப்பார். அதனால் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்காது. ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் வருவதால், உமேஷ் யாதவ் உட்கார வைக்கப்படுவார். இந்த டெஸ்ட் போட்டி வென்று, நம்பர் 1 அணி என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இநதியா உள்ளது.