பாதுகாப்பு உறுதி
மேலும், இரு அணிகளிலும் ஏராளமான வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அசாம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கவும் சேப்பாக்கம் மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கமாண்டோ படை
மைதானம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கமாண்டோ படையினர் உள்பட மொத்தம் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கண்காணிப்பு பணி
மைதானத்தை சுற்றிலும் சிறப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.வீரர்கள் தங்கியுள்ள விடுதிகளுக்கும் கூடுதலான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மோப்பநாய்கள், நிபுணர்கள்
இதேபோல காவல்துறையினருடன் தனியார் தன்னார்வ தொண்டர்களும் பாதுகாப்பில் இறங்கியுள்ளனர். மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகின்றனர்.