மும்பை: இந்திய அணியின் இளம் வீரர் திலக் வர்மா தான் அடுத்த விராட் கோலி என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் பாராட்டியுள்ளார். நெருக்கடியான சூழுலில் சிறப்பாகச் செயல்படும் திலக் வர்மாவின் திறன், இந்தியாவின் டி20 உலகக் கோப்பைக்கு மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டு ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக வர்மா ஆடிய இன்னிங்ஸை அவர் குறிப்பாக சுட்டிக்காட்டினார்.
கோலிக்கு மாற்று வீரராக வர்மா உள்ளதாகவும் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.விராட் கோலி போல் அழுத்தத்தைச் சமாளிக்கும் ரோலை திலக் வர்மா ஏற்றுக்கொண்டுள்ளதாக இர்ஃபான் பதான் தெரிவித்தார். இந்தியா அடுத்த மாதம் தனது டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்கவைக்க தயாராகிறது.

தனது யூடியூப் சேனலில், பதான் வர்மாவின் 2025 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி இன்னிங்ஸை நினைவுபடுத்தினார். ''திலக் வர்மா 3 மற்றும் 4ஆம் இடங்களில் பேட் செய்துள்ளார். அழுத்தத்தைச் சமாளித்து சதங்கள் அடித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக அவர் ஆடிய சிறப்பான ஆட்டம் இல்லையெனில் இந்தியா வெற்றி பெற்றிருக்க முடியாது,'' என்றார்.
''கோலியைப் போலவே திலக் தனது மதிப்பைப் பெருக்கிக் கொண்டுள்ளார். கோலி ஒரு பெரிய வீரர், அவர் அழுத்தத்தைச் சிறப்பாகக் கையாண்டார். முழு டி20 உலகக் கோப்பையிலும் ரன் எடுக்காவிட்டாலும், இறுதிப் போட்டியில் முக்கியமான ஒரு இன்னிங்ஸை அவர் ஆடினார் என ரசிகர்கள் நம்பினர்,'' என இர்ஃபான் விளக்கினார்.
திலக் வர்மா டி20 தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இதுவரை 20 போட்டிகளில் 47.25 சராசரியில் 567 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு அரைசதங்கள் அடங்கும். காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து டி20 தொடரின் முதல் மூன்று ஆட்டங்களில் அவர் பங்கேற்கமாட்டார்.
''ஆசிய கோப்பை இறுதிப் போட்டியிலும் திலக் வர்மா அதேபோல் ஆடினார். பவர்ப்ளேயில் இந்தியா மூன்று விக்கெட்களை இழந்தது. திலக் கணக்கிட்ட ரிஸ்க்குகளை எடுத்து, தனது ஆட்டத் திட்டத்தை நம்பினார். சஞ்சு சாம்சன், சிவம் தூபேவும் ஹை-ரிஸ்க் ஷாட்களை ஆடி இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்,'' என இர்ஃபான் தெரிவித்தார்.