இரு வீரர்கள்
இலங்கையின் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணியும் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் விளையாட தேர்வாகியுள்ள அணிகளில் ஒன்றாகும். அந்த அணியில் பந்து வீச்சாளர் மலிங்கா மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் திலகரத்னே தில்ஷன் ஆகியோர் முக்கிய வீரர்களாகும்.
தில்ஷன் விலகல்
இதில் தில்ஷன் தனது அணிக்காக விளையாடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதை அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது. தனிப்பட்ட காரணங்களால் அவர் விளையாடவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் அணிக்கு டிமிக்கி
அதே நேரம் உள்ளூர் டி20 போட்டியில் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணியின் கேப்டனாக இருந்த லத்திஷ் மலிங்காவோ, அந்த அணியைவிட்டுவிட்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட முன்வந்துள்ளார்.
மும்பை போதும்
மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளார். எனவே தனது நாட்டு அணிக்கு எதிராகவே பந்து வீசும் சூழ்நிலை மலிங்காவுக்கு.