சென்னை : டிஎன்பில் மூன்றாவது சீசன் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எதிர் நோக்கியுள்ளது. லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இறுதி போட்டிக்கான இரண்டு அணிகளை தேர்ந்து எடுக்கும் குவாலிபையர் போட்டிகள் இன்றுடன் முடிவடைய உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால், கடந்த இரண்டு நாட்களில் நடக்க வேண்டிய டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசன் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டன. நேற்று குவாலிபையர் போட்டியும்,எலிமினேட்டர் போட்டியும் ஒரே நாளில் நடைபெற்றது.