For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வருண் சக்ரவர்த்தியின் டககர் பவுலிங்..எங்க ராசா இருந்தீங்க இவ்வளவு நாளு..நடப்பு சாம்பியன் 2வது தோல்வி

திருநெல்வேலி: தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 6வது சீஸனின் முதல் டபுள் ஹெட்டர் திருநெல்வேலியில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்த மதுரை அணி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியது.

அந்த அணியின் அறிமுக வீரர் சன்னி சந்து அற்புதமாக பந்துவீசி சேப்பாக் கேப்டன் கெளஷிக் காந்தியை 1 ரன்னில் முதல் ஓவரிலேயே ஆட்டமிழக்கச் செய்தார்.

அடி தூள்..!! டிஎன்பிஎல் முதல் போட்டியே சூப்பர் ஓவர்.. நெல்லையிடம் போராடி சரணடைந்த சேப்பாக்அடி தூள்..!! டிஎன்பிஎல் முதல் போட்டியே சூப்பர் ஓவர்.. நெல்லையிடம் போராடி சரணடைந்த சேப்பாக்

சரிந்த விக்கெட்

சரிந்த விக்கெட்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாராயண் ஜெகதீசன் ஒரு ரன்னில் தனது விக்கெட்டை கிரண் ஆகாஷிடம் இழந்து வெளியேறினார். ஒரு கட்டத்தில் மதுரையின் சிறப்பான பந்துவீச்சால் சேப்பாக் 7 விக்கெட்களை இழந்து வெறும் 51 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

அதற்கு முக்கிய காரணமாக கிரண் ஆகாஷின் அபாரமான வேகப்பந்துவீச்சும், வருண் சக்கரவர்த்தியின் சிறப்பான சுழற்பந்துவீச்சும் இருந்தது.

வருண் சக்ரவர்த்தி அபாரம்

வருண் சக்ரவர்த்தி அபாரம்

ஆனால், 8வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த சசிதேவ் மற்றும் ஹரிஷ் குமார் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தியதோடு டி.என்.பி.எல் வரலாற்றில் 8வது விக்கெட்டிற்கு அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பையும் 82 ரன்கள் 70 பந்துகளில் அமைத்தனர். சேப்பாக் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்கள் இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது, வருண் சக்ரவர்த்தி 28 ரன்களை விட்டு கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார்.

பொறுப்பான ஆட்டம்

பொறுப்பான ஆட்டம்

எளிய இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய மதுரை நிதானமாக ஆட்டத்தை தொடங்க சந்தீப் வாரியரின் வேகத்தில் விஷால் வைத்யா 10 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் 2வது விக்கெட்டிற்கு அனுபவ வீரர்களான கே.பி அருண் கார்த்திக் மற்றும் பி அனிருத் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி குறுகிய நேரத்தில் 50 ரன்கள் சேர்த்தனர்.

நடப்பு சாம்பியன் ஏமாற்றம்

நடப்பு சாம்பியன் ஏமாற்றம்

சேப்பாக் சார்பில் அலெக்சாண்டர் தனது சிறப்பான சுழற்பந்துவீச்சால் கே.பி அருண் கார்த்திக் , ஜெகதீசன் கெளஷிக் விக்கெட்களை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தினார். மதுரை கேப்டன் சத்ருவேத் தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் அவுட்டாகி வெளியேறினார்.இருப்பினும் அனிருத் சீதாராம் தன் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் தனது 6வது அரைசதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் 11 பந்துகள் எஞ்சிய நிலையில், மதுரை அணி வெற்றி பெற்றது.

Story first published: Saturday, June 25, 2022, 21:00 [IST]
Other articles published on Jun 25, 2022
English summary
TNPL Defending champions Chepauk super gillies faces 2nd consecutive loss வருண் சக்ரவர்த்தியின் டககர் பவுலிங்..எங்க ராசா இருந்தீங்க இவ்வளவு நாளு..நடப்பு சாம்பியன் 2வது தோல்வி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X