பெங்களூரு: நேற்று உலகிலேயே அதிக டென்ஷனாக இருந்தவர் நீதிபதி குமாரசாமியோ அல்லது ஜெயலலிதாவோ அல்ல.. மாறாக விராத் கோஹ்லிதான் கடுமையான தலைவலியில் இருந்திருப்பார்...!
இருக்காதா பின்னே... ஜெயிச்சும் புண்ணியம் இல்லாத அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை படு தோல்வி அடைய வைத்தால் யாருக்குத்தான் டென்ஷன் வராமல் இருந்திருக்கும்...!

உண்மையிலேயே இந்த வெற்றியால் பஞ்சாபுக்கு கொஞ்சம் கூட பலன் இல்லை. காரணம், அது ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டது.
அதேசமயம், பெங்களூரு அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்று 2 புள்ளிகளைப் பெற்றிருந்தால் அது பிளே ஆப் பிரிவுக்கு முன்னேற உதவியிருக்கும்...!
இந்த எண்ணத்தத்தைதான் இப்போது டிரோலில் ஏற்றி உருட்டிக் கொண்டுள்ளனர் நம்மவர்கள் வாட்ஸ்ஆப், பேஸ்புக்கில்!
அப்படி ஒரு படம்தான் இது...!
அதுல சொல்லியிருக்கிறத பாருங்க.. அந்த "வேதனை"யைப் பாருங்க...!
"யோவ் அதான் நீ வெளில போய்ட்டல்ல.. அப்றம் எதுக்குயா இந்த ரெண்டு பாயிண்ட்... நாங்க ஜெயிச்சா பிளே ஆப்புக்காவது போவோம்ல.. அப்படி நாங்க பிளே ஆப்புக்குப் போறதை தடுக்குறதுல அப்படி என்னயா உங்களுக்கு சந்தோஷம்...."