துபாய் : 19 வயது உட்பட்டவர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றில் இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் பல பரிட்சை நடத்தி வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணியில் ஆர்சின் குல்கர்னி 24 ரன்களில் ஆட்டம் இழக்க ருத்ரா பட்டேல் ஒரு ரன்னில் வெளியேறினார். இதனை அடுத்து கேப்டன் மற்றும் ஆதார்ஸ் சிங் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
