துபாய் : 19 வயதுக்குட்பட்டவருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி கடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் தோல்வியை தழுவிய நிலையில் இன்று வெற்றி பெற வேண்டிய உத்வேகத்துடன் நேபாளை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களம் இறங்கிய நேபாள் அணி, வந்த வேகத்தில் பெவிலியன் நோக்கி திரும்பினார்கள். இந்திய அணியின் பந்துவீச்சை கொஞ்சம் கூட எதிர்கொள்ள முடியாமல் நேபாள் வீரர்கள் தடுமாறினர்.
