
சகல வசதி
இந்த நிலையில், இங்கிலாந்து செல்வதற்கு முன்பு மும்பையில் 14 நாட்கள் குவாரண்டைனில் இந்திய வீரர்கள் நேற்று (மே.19) முதல் இணைந்துள்ளனர். ஜூன் 2ம் தேதி மும்பையில் இருந்து லண்டன் செல்லும் இந்திய வீரர்கள், அங்கிருந்து போட்டி நடைபெறும் மைதானமான சவுத்தாம்ப்டன் 'Ageas Bowl' ஸ்டேடியத்திற்கு செல்கின்றனர். அது வெறும் மைதானம் மட்டும் அல்ல. அந்த ஸ்டேடியத்தில் சகல வசதியும் கொண்ட நட்சத்திர ஹோட்டலும் உள்ளது. வீரர்கள் அனைவரும் 10 நாட்களுக்கு அந்த மைதானத்தில் அமைந்துள்ள ஹோட்டலில் தான் தங்குகின்றனர்.

171 அறைகள்
ஹோட்டல்-னா நீங்க நினைக்கிற மாதிரி சாதாரணமானது இல்லீங்க. ஏசி ரூமில் படுத்துக் கொண்டே, பக்கா வியூவில் நீங்கள் போட்டியை உங்கள் அறையில் இருந்தே பார்க்க முடியும். அதற்கு ஏற்றார் போல் தான் அறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஸ்டேடியத்தில், 2011ம் ஆண்டு இங்கிலாந்து - இலங்கை இடையே முதல் டெஸ்ட் போட்டி நடந்தாலும், ஹோட்டல் 2015 வரை திறக்கப்படவே இல்லை. 3 தளங்கள் கொண்ட இந்த ஹோட்டலில், மொத்தம் 171 அறைகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் பால்கனி இருக்கிறது. அதேபோல், இந்த 171 அறையில் இருந்தும் போட்டியை நீங்கள் நேரடியாக கண்டு ரசிக்க முடியும்.

ரசிகர்களிடையே போட்டி
இதுபோன்று போட்டி நடக்கும் காலங்களில், 20 அறைகள் வாடகைக்கு விடப்படுகின்றன. ஏனெனில், இங்குள்ள அறைகளில் இருந்து கிரிக்கெட்டை ரசிக்க வேண்டும் என்பதில் ஏக டிமாண்ட் உள்ளது. கலெக்ஷன் கல்லா கட்டுமாம். குறிப்பாக, 2018ம் ஆண்டு இந்தியா - இங்கிலாந்து அணிகள் இந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடிய போது, இந்த 20 அறைகளில் இடம்பிடிக்க ரசிகர்களிடையே போட்டாப்போட்டியே நடைபெற்றதாம்.

ஹார்ட் குவாரண்டைன்
இங்குள்ள அறைகளில் இந்திய வீரர்களும் அவர்களது குடும்பமும், மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய வீராங்கனைகளும் தனிமைப்படுத்தி தங்க வைக்கப்படுகின்றனர். மொத்தம் 10 நாட்கள் குவாரண்டைன் இருக்கும். அதுவும் ஹார்ட் குவாரண்டைனாக இருக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில், வீரர்கள் பயிற்சிக்கு கூட வெளியே செல்ல முடியாது.


Click it and Unblock the Notifications