எப்படி
இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. இந்த பிட்ச் முழுக்க முழுக்க ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இது பிங்க் பால் போட்டி என்பதால் ஸ்பின் பவுலிங்கை விட ஸ்பீட் பவுலிங்கிற்கு பிட்ச் அதிகம் ஒத்துழைப்பு கொடுக்கும்.
பவுன்சர்
முக்கியமாக பவுன்சர், ஷார்ட் பந்துகளை வீசினால் அதிக ஆதிக்கம் செலுத்த முடியும். இந்திய அணி இதனால் பவுலிங் ஆர்டரில் முக்கியமான மாற்றங்களை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இங்கிலாந்துக்கு எதிராக சிராஜ், குல்தீப் இருவரும் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
நீக்கம்
இவர்கள் இருவருக்கும் பதிலாக இந்திய அணிக்குள் உமேஷ் யாதவ் மற்றும் பும்ரா இருவரும் அணிக்குள் வர உள்ளனர். உமேஷ் யாதவ் இந்திய பிட்ச்களில் நன்றாக பவுலிங் செய்ய கூடியவர். பந்தை எளிதாக பவுன்ஸ் செய்ய கூடியவர். இதனால் அவரை கொண்டு வர கோலி முடிவு செய்துள்ளார்.
பவுலர்
இன்னொரு பக்கம் பும்ரா இந்த போட்டிக்காக தீவிரமாக தயாராகிக் கொண்டு இருக்கிறார். இதனால் இவர்கள் இருவரும்தான் இந்திய அணியில் பிங்க் பால் போட்டியில் கேம் சேஞ்சராக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. உமேஷ் யாதவ் மீண்டும் கம்பேக் கொடுப்பது இந்திய அணிக்குள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.