எப்படி
இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக பும்ரா வெளியேறி உள்ளார். குடும்ப காரணங்களுக்காக பும்ரா வெளியேறி உள்ளார். இன்றுதான் பிசிசிஐ அமைப்பிடம் இந்த அறிவிப்பை பும்ரா வெளியிட்டார்.
பும்ரா
இதன் காரணமாக இந்திய அணியில் உமேஷ் யாதவ் இணைய உள்ளார். ஏற்கனவே இவர் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன் இந்திய அணியில் இணைவதாக இருந்தது. ஆனால் இவர் பிட்னஸை நிரூபிக்க தாமதம் ஆனதால் இந்திய அணிக்குள் வரவில்லை.
சந்தேகம்
இதனால் கடைசி டெஸ்ட் போட்டியில் இவர் இந்திய அணியில் இணைவார். அதே சமயம் ஏற்கனவே அணியில் இஷாந்த், சிராஜ் ஆகியோர் உள்ளனர். எப்படியும் இரண்டு பாஸ்ட் பவுலர்கள், மூன்று ஸ்பின் பவுலர் மட்டுமே களமிறங்குவார்கள்;.
வாய்ப்பு
இதனால் உமேஷ் யாதவ் உண்மையில் அணியில் இணைவாரா அல்லது இருக்கிற வீரர்களை வைத்து கோலி களமிறங்குவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. நான்காவது டெஸ்ட் இந்திய அணிக்கு முக்கியமான டெஸ்ட் ஆகும். இதனால அணியில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படும் என்கிறார்கள்.