
பெங்களூரு வெற்றி
176 ரன்கள் என்ற வெற்றி என்ற இலக்குடன் பின்னர் ஆடிய பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஹெட்மயர் 75 ரன்களும், குர்கிரத் சிங் 65 ரன்களையும் குவித்தனர். ஹெட் மயர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

நோபால் சர்ச்சை
இதில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்த போது கடைசி ஓவரில் உமேஷ் யாதவ் பந்து வீசினார். அந்த பந்தை களநடுவராக இருந்த நிகெல் லாங் நோ பால் என்று அறிவித்தார். ஆனால் உமேஷ் அந்த பந்தை சரியாக தான் வீசினார் என்று நடுவருடன் கேப்டன் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கதவு உடைந்தது
ஒரு வழியாக போட்டியும் முடிந்தது. கோலி தன்னிடம் வாக்குவாதம் செய்ததை நினைத்துக் கொண்டே ஓய்வறைக்கு சென்றார் நடுவர். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. ஆத்திரம் கொண்டவராக, அங்கிருந்த கண்ணாடி கதவை தனது காலால் எட்டி உதைத்தார். அதனால் அந்த கதவு உடைந்தது.

அபராதம் விதிப்பு
இதையடுத்து கர்நாடக கிரிக்கெட் சங்கம் இந்த சம்பவம் குறித்து ஐ.பி.எல் நிர்வாகத்திடம் முறையிட இந்த சம்பவத்தில் நடுவரின் தவறு உறுதி செய்யப் பட்டு அவருக்கு அபராதத்தினை விதித்தது. அதன்காரணமாக உடைத்த கதவை மாற்ற ரூபாய் 5000 அபராதமாக விதிக்கப்பட்டது. அதனை நடுவர் தனது ஊதியத்திலிருந்து செலுத்தி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications