
த்ரில் வெற்றி
முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 150 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆனால் இந்த போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெறுவதற்கு 2 வாய்ப்புகள் அதிசயமாக கிடைத்தது. எனினும் அதனை தவறவிட்டுள்ளது.

கடைசி ஓவர் டிராமா
ஜிம்பாப்வே அணி வெற்றி பெறுவதற்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது முதல் 4 பந்துகளில் 11 ரன்களை அடித்துவிட்டனர். 5வது பந்தில் எதிர்பாராத விதமாக காராவா போல்ட் ஆனார். இதனால் கடைசி பந்தில் 5 ரன்களை அடித்தால் வெற்றி என்ற சூழல் உருவானது.

வங்கதேசம் வெற்றி
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த பந்தை பேட்ஸ்மேன் முசாராபானி சற்று இறங்கி ஆட நினைத்து ஸ்டம்ப் அவுட் செய்யப்பட்டார். இதனால் வங்கதேசம் வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்டு, வங்கதேச வீரர்களும் ரசிகர்களும் கொண்டாட தொடங்கினர். பின்னர் வீரர்கள் களத்தில் இருந்து வெளியேற தொடங்கினர். ஆனால் அப்போது தான் அம்பயர் ட்விஸ்ட் கொடுத்தார்.

அம்பயர் தந்த ட்விஸ்ட்
அதாவது விக்கெட் கீப்பர் நூரல் ஹசன் ஸ்டம்பிற்கு முன்னால் கைகளை நீட்டி பிடித்தது தெரியவந்தது. இதனையடுத்து அதனை நோ பாலாக அறிவித்து, அனைத்து வீரர்களும் மீண்டும் களத்திற்குள் அழைக்கப்பட்டனர். அப்போது ஒரே பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. ஆனாலும் அவரால் பந்தை அடிக்க முடியாததால் வங்கதேசம் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.


Click it and Unblock the Notifications











