
சிறப்பான பௌலர்கள்
இந்திய அணி தற்போது மிகவும் சிறப்பான டெஸ்ட் அணியாக உள்ளது. ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் காணப்படுகிறது. மேலும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் முதல் இடத்தில் தற்போதைய அணி உள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போதைய விராட் கோலி தலைமையிலான பௌலர்கள் மிகவும் சிறப்பாக அணி வழிநடத்தி செல்கின்றனர்.

சுனில் கவாஸ்கர் பாராட்டு
இந்நிலையில் தன்னுடைய தாறுமாறான பௌலிங்கால் இந்திய டெஸ்ட் அணி முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை கடந்த 2018 -19ல் வெற்றி கொண்டது இந்திய அணியின் சிறப்பாக பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான வெற்றி சூழல்
அணியின் திறன், நிலைத்தன்மை உள்ளிட்டவை இதுவரை இல்லாத வகையில் காணப்படுவதாகவும் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்போதைய பௌலர்கள் மாறுபட்ட பௌலிங் அட்டாக்குகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய இந்திய அணி எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெறும் வகையில் சிறப்பாக காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறப்பான பௌலர்கள்
கடந்த 1980களில் இந்திய பேட்டிங் சிறப்பாக இருந்ததுபோல தற்போது காணப்பட்டாலும், கோலி தலைமையிலான பௌலர்கள் தற்போது உள்ளதுபோல முன்னெப்போதும் இருந்ததில்லை என்று அவர் கூறியுள்ளார். இதேபோல பேட்ஸ்மேன்களும் ஆஸ்திரேலிய அணியை காட்டிலும் அதிக ரன்களை குவிக்கும்வகையில் உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


Click it and Unblock the Notifications