|
கெயில் நீ பெயில்
அந்த பதிவை பார்த்த ஒருவர் யுனிவர்சல் பாஸ், யுனிவர்சல் திருடனுடன் இருக்கிறார் என்று கூறியுள்ளார். மற்றொருவர் மல்லையாவுடன் சேர்ந்தால், கெயில் பெயிலாகி விடுவார் என்று விமர்சித்திருக்கிறார்.
|
நெட்டிசன்கள் கலாய்ப்பு
மற்றொருவரோ, மல்லையாவின் நட்பை கட் செய்துவிடுங்கள்... அவர் தர வேண்டிய 9,000 கோடி ரூபாயை கேளுங்கள் என்று டுவீட்டியிருக்கிறார். இவரை போல பலரும், கெயிலையும், மல்லையாவையும் கலாய்த்து தள்ளி இருக்கின்றனர்.
|
மல்லையா பதிவு
அதில் கோபமடைந்த விஜய் மல்லையா தமது பதிலையும் பதிவு செய்திருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது: என்னை திருடன் என்று சொல்வதற்கு முன் உங்களது வங்கிக்கு சென்று உண்மை நிலை என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வங்கிகள் மறுப்பு
கடன் வாங்கிய பணத்தை 100 சதவீதம் திருப்பி தருகிறேன் என்று சொல்லி இருக்கிறேன். ஆனால், நான் சொல்வதை வங்கிகள் ஏற்றுக்கொள்ளாதது ஏன் ? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
9,000 கோடி ரூபாய்
ஐபிஎல் போட்டிகளில் கிறிஸ் கெயில் தொடக்கத்தில் பெங்களூரு அணிக்காக விளையாடினார். அந்த அணியின் முன்னாள் உரிமையாளராக இருந்தவர் விஜய் மல்லையா. அவர், இந்திய வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த புகாரில் சிக்கி, தற்போது இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளார்.
பொதுமக்களின் குரல்
அவரை மீண்டும் இந்தியா கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விஜய் மல்லையாவை பொதுவெளியில் பார்க்கும் இந்தியர்கள் பலரும் அவரை திருடன் என்று அழைக்கின்றனர்.