
எல்லோரும் கைக்கொடுங்க
இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "உத்தரகண்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பினால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன். மீட்புப் பணிகளுக்காக என் போட்டி ஊதியத்தை கொடுக்க விரும்புகிறேன். அனைவரும் நிதியளிக்க முன் வர வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

அதிரடி ரிஷப்
முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்த இந்திய அணியை, ரிஷப் பண்ட் தனது அதிரடியான 91 ரன்கள் மூலம் புஜாராவுடன் இணைந்து மீட்டார்.

கௌரவமான ஸ்கோர்
சதம் பற்றியெல்லாம் கவலைப்படாமல், 91 ரன்களில் தூக்கி சிக்ஸர் அடிக்க நினைத்து, கேட்ச்சாகி வெளியேறினார். புஜாரா 73 ரன்களும், சுந்தர் 85 ரன்களும் எடுக்க இந்தியா முதல் இன்னிங்ஸில் 337 என்ற ஓரளவுக்கு கௌரவமான ஸ்கோரை எட்டியது.

ரசிகர்கள் பாராட்டு
இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது மட்டுமின்றி, உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரங்களையும் நினைத்து பார்க்கும் ரிஷப்பின் இந்த அறிவிப்புக்கு சமூக தளங்களில் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications