வைபவ் சூர்யவன்ஷி டெஸ்ட் அறிமுகம் குறித்து முக்கிய முடிவு எடுத்த பிசிசிஐ.. MI வீரர் குறித்தும் முடிவு
மும்பை: 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி தற்போது இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் திட்டங்களில் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன இவருடன் சேர்த்து ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்-ரவுண்டரான திலக் வர்மாவும் தற்போதைக்கு இந்திய டெஸ்ட் அணியின் பரிசீலனையில் இல்லை எனத் தெரியவந்துள்ளது.
சூர்யவன்ஷிக்கு திறமை இருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட் அனுபவத்தில் அவர் இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளார். அவர் இதுவரை பத்து முதல்தரபோட்டிகள் மற்றும் சில 19 வயதுக்குட்பட்டோருக்கானசிவப்புப் பந்து போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். துலீப் கோப்பை தொடரில் மத்திய மண்டல அணிக்கு எதிரான போட்டியில் கிழக்கு மண்டல அணிக்காக அவர் எடுத்த 92 மற்றும் 40 ரன்கள் அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின.

இருப்பினும், தேசிய தேர்வுக்குழுவினர் அவரைத் தேர்வு செய்ய வேண்டுமானால், அவர் தனது ஆட்டத்தில் இன்னும் பெரும் நிலைத்தன்மையை நிரூபிக்க வேண்டும். தெற்கு மண்டல அணிக்கு எதிரான துலீப் கோப்பை இறுதிப் போட்டியிலிருந்து அவர் இதனைத் தொடங்கலாம்.
"வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் மூலம் வெள்ளைப்பந்து கிரிக்கெட் விளையாடும் அனுபவத்தைப் பெறுவது மிகச் சிறந்த விஷயம். அதே நேரத்தில், அவர் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களுக்குத் திரும்பி, சிவப்புப் பந்து கிரிக்கெட்டில் விளையாடி தனது திறமையை வளர்த்துக் கொள்வதற்கும் போதிய கால அவகாசம் கிடைத்துள்ளது. நாம் அனைவரும் டெஸ்ட் கிரிக்கெட் வளர வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கு வைபவ் போன்ற வீரர்கள் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவது அவசியம்," என்று ராகுல் டிராவிட் குறிப்பிட்டிருந்தார்.
வைபவ் சூர்யவன்ஷி ஒரு வீரராக எவ்வாறு தன்னை வளர்த்துக் கொள்கிறார் என்பதைப் பொறுத்தே அவரது பேட்டிங் வரிசை அமையும். தற்போது அவர் ஒரு தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறார், ஆனால் அவரது அதிரடியான ஆட்டத்தை நடுகள வரிசையில் இன்னும் சிறப்பாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.
அவர் தொடக்க ஆட்டக்காரராகவே தொடர்ந்தால், எதிர்காலத்தில் தற்போது 34 வயதாகும் கே.எல். ராகுலுக்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து தொடக்க வீரராகக் களம் இறங்குவதற்கான தகுந்த வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கலாம்.


Click it and Unblock the Notifications


