Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வைபவ் சூர்யவன்ஷிக்கு துணை கேப்டன் பதவி வேண்டாம்.. இவரை போடுங்க- வசீம் ஜாபர் கருத்து

மும்பை: 2026-27 துலீப் டிராபி தொடருக்கான East Zone அணியின் துணை கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷிக்கு பதில் அபிமன்யு ஈஸ்வரனை நியமித்திருக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த தொடர் ஆகஸ்ட் 23 அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை 29 அன்று East Zone அணி அறிவிக்கப்பட்டது. இதில் அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் முகமது ஷமி போன்ற அனுபவமிக்க வீரர்கள் இருந்தபோதிலும், இஷான் கிஷன் கேப்டனாகவும், சூர்யவன்சி துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.

தனது யூடியூப் சேனலில் பேசிய வசீம் ஜாபர், "தேர்வாளர்கள் வைபவ்க்குப் பரிசு வழங்க விரும்பியிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவருடைய முதல்-தர கிரிக்கெட் சாதனை மற்றும் ரஞ்சி டிராபி செயல்பாடுகளைப் பார்த்தால், புள்ளிவிவரங்கள் இன்னும் அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை.

Vaibhav sooryavanshi

எனவே, அந்த வகையில் பார்க்கும்போது, இந்த முடிவு நிச்சயமாக விவாதத்திற்குரியது தான். வைபவ் தரப்பில் இருந்து பார்த்தால், இது ஒரு ஊக்கமளிக்கும் விஷயம். அவருக்கு இது நிச்சயமாக ஒரு நல்ல அங்கீகாரம். ஆனால், அபிமன்யு ஈஸ்வரனும் அந்த அணியில் இருக்கிறார். எனவே, என் கருத்துப்படி, அபிமன்யு ஈஸ்வரனை துணை கேப்டனாக நியமித்திருப்பது தான் சரியான முடிவாக இருந்திருக்கும்" என்றார்.

ஆட்டிடியூட் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டேன்.. ஆனால் அது பற்றி எனக்கு தெரியாது- ஹர்திக்

ஆட்டிடியூட் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டேன்.. ஆனால் அது பற்றி எனக்கு தெரியாது- ஹர்திக்

ஈஸ்வரன் 113 முதல்-தர போட்டிகளில் விளையாடி 47.61 சராசரியுடன் 8,381 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 36 அரைசதங்கள் மற்றும் 27 சதங்கள் அடங்கும். மேலும், உள்நாட்டு கிரிக்கெட்டில் பெங்கால் அணியை வழிநடத்திய சிறந்த கேப்டன்ஷிப் அனுபவமும் அவருக்கு உள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், "அதே நேரத்தில், இதை நாம் ஒரு பெரிய பிரச்சனையாக்க வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன். ஏனெனில் இறுதியில் இஷான் கிஷன் தான் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தப் போகிறார். ஆனால், அபிமன்யு ஈஸ்வரன் போன்ற ஒரு அனுபவமிக்க வீரர், இவ்வளவு கிரிக்கெட் விளையாடி, ஏற்கனவே பெங்கால் அணியின் கேப்டனாகவும் இருந்திருக்கும் போது, அவரை துணை கேப்டனாக நியமித்திருப்பது தான் பொருத்தமாக இருந்திருக்கும்" என்றார்.

"அதே சமயம், இதை வைபவ்க்கான கூடுதல் பொறுப்பாகவும், அவர் ஆவலுடன் எதிர்பார்க்க வேண்டிய ஒரு விஷயமாகவும் நான் பார்க்கிறேன். அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், அவர் அணிகளுக்கு கேப்டனாகச் செயல்படுவதை நாம் பார்க்கலாம், ஏனெனில் அவரிடம் அதற்கான திறமை உள்ளது. அவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் விதத்தைப் பார்க்கும்போது, அவருக்கு கேப்டன்ஷிப் வாய்ப்புகள் விரைவில் தேடிவரும்."

வைபவ் சூர்யவன்ஷி மீது தேவையில்லாத சுமை..கெடுக்க பார்க்கிறதா பிசிசிஐ? கிரிக்கெட் வல்லுனர்கள் வார்னிங்

வைபவ் சூர்யவன்ஷி மீது தேவையில்லாத சுமை..கெடுக்க பார்க்கிறதா பிசிசிஐ? கிரிக்கெட் வல்லுனர்கள் வார்னிங்

"எனவே, இது பெரிய அளவில் கூச்சல் போட வேண்டிய ஒரு விஷயம் என்று நான் நினைக்கவில்லை. அவர் சிறப்பாகச் செயல்படுவார் என்று நான் நம்புகிறேன். என் கருத்துப்படி, இந்த கூடுதல் பொறுப்பு அவருக்கு மேலும் ஊக்கமளிக்கும்" என்றார். கிழக்கு மண்டல அணி தனது முதல் போட்டியில் North East Zone அணியை ஆகஸ்ட் 23 அன்று பெங்களூருவில் எதிர்கொள்கிறது.

Story first published: Saturday, August 1, 2026, 15:50 [IST]
Other articles published on Aug 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+