U19 உலககோப்பை வரலாற்றில் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி புதிய சாதனை.. முழு விவரம்
மும்பை: இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய உலகின் மிக இளைய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். பிஹாரின் சமஸ்திபூரைச் சேர்ந்த இடதுகை பேட்ஸ்மேனான இவர், வியாழன் அன்று இந்த அரிய மைல்கல்லை எட்டினார். அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் களமிறங்கியபோது, அவருக்கு வெறும் 14 ஆண்டுகள் 294 நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது.
ஜிம்பாப்வேயின் புலவாயோவில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை 2026 போட்டியில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றபோது சூர்யவன்ஷி இந்த சாதனையை நிகழ்த்தினார். இதன் மூலம், 2010 ஜனவரி 15 அன்று ஜிம்பாப்வேவுக்கு எதிராக கிறிஸ்ட்சர்ச்சில் கனடாவுக்காக விளையாடிய நிதிஷ் குமாரின் சாதனையை முறியடித்தார்.

நிதிஷ் குமார் தனது முதல் 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை போட்டியில் விளையாடியபோது 15 ஆண்டுகள் 245 நாட்கள் வயதை எட்டியிருந்தார். வைபவ் சூர்யவன்ஷி, பணக்கார இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் ஆடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.தனது முதல் 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை போட்டியில் பேட்டிங்கில் வைபவ் சூர்யவன்ஷி சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தார்.
108 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட அந்தப் போட்டியில், குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இந்திய அணியின் இன்னிங்ஸில் மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தில் ரித்விக் அப்பிடேவின் பந்துவீச்சில் 4 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து அவர் கிளீன் போல்டானார். ஒரு பெரிய ஷாட்டுக்கு முயன்ற அவர், பந்தை கணிக்கத் தவறி தனது விக்கெட்டை இழந்தார்.
எனினும், பேட்டிங்கில் ஏற்பட்ட சறுக்கலை பந்துவீச்சில் ஈடுசெய்து வைபவ் சூர்யவன்ஷி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அமெரிக்க அணியின் இன்னிங்ஸின் 36வது ஓவரில் இந்திய கேப்டன் ஆயுஷ் அவரை பந்துவீசுவதற்கு அழைத்தார். தனது இரண்டாவது பந்திலேயே நிதீஷ் சுதினி என்ற செட்டான பேட்ஸ்மேனின் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
நிதீஷ் சுதினி 52 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்தபோது, கீப்பர் கிலன் படேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஏழாம் நிலை பேட்ஸ்மேனாக களமிறங்கிய அவர், நான்கு பவுண்டரிகளை அடித்திருந்தார். இந்த விக்கெட்டை எடுத்ததன் மூலம், 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை போட்டியில் விக்கெட் எடுத்த இளம் இந்திய வீரர் என்ற பெருமையையும் வைபவ் பெற்றார்.
அமெரிக்கா அணிக்காக நிதீஷ் சுதினி, அத்னித் ஜாம்புடன் (41 பந்துகளில் 18 ரன்கள்) ஆறாவது விக்கெட்டுக்கு 53 பந்துகளில் 30 ரன்களும், சப்ரிஷ் பிரசாத்துடன் (17 பந்துகளில் 7 ரன்கள்) எட்டாவது விக்கெட்டுக்கு 32 பந்துகளில் 25 ரன்களும் சேர்த்தார். இதனால், அமெரிக்க அணி 35.2 ஓவர்களில் 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய தரப்பில், ஹெனில் படேல் ஏழு ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சிறப்பாகச் செயல்பட்டார். தீபேஷ் தேவேந்திரன், ஆர்.எஸ்.அம்ப்ரிஷ் மற்றும் கிலன் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.


Click it and Unblock the Notifications