
வெங்கடேஷ் பிரசாத் கண்டனம்
விராட் கோலியின் பேட்டிங் சொதப்பலால் நேற்று ஆட்டத்தில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில், விராட் கோலி மீது பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரை அணியிலிருந்து நீக்க முடியாது என்று ஆணித்தரமாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்திய அணியின் இந்த முடிவுக்கு வெங்கடேஷ் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கங்குலி காலம்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், ஒரு காலம் இந்திய கிரிக்கெட்டில் இருந்தது. நீங்கள் பார்மில் இல்லை என்றால், நீங்கள் யார், என்ன செய்தீர்கள் என்பதை எல்லாம் யாரும் பார்க்க மாட்டார்கள், அணியை விட்டு நீக்கிவிடுவார்கள். கங்குலி, சேவாக், ஜாகிர் கான், ஹர்பஜன் சிங் போன்ற வீரர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி, சிறப்பாக செயல்பட்டு மீண்டும் அணியில் இடம் பிடிப்பார்கள்.

விதி மாற்றப்பட்டது
இது தான் பிசிசிஐயின் விதியாக இருந்தது. தற்போது இது மாற்றப்பட்டுள்ளது. தற்போது எல்லாம் ஃபார்மில் இல்லாத வீரர்களுக்கு ஓய்வு வழங்குகிறார்கள். ஓய்வு வழங்கினால் எப்படி அவர்களால் முன்னேற முடியும்.நமது நாட்டில் இப்போது திறமைகள் கொட்டி கிடக்கின்றன. இதனால் இனி கடந்த கால சாதனைகளை வைத்து கொண்டு அணியில் தொடர்ந்து விளையாட முடியாது.

அணில் கும்ப்ளே நிலைமை
இந்திய கிரிக்கெட் அணியில் ஜாம்பவானான அனில் கும்ப்ளேவை அணியிலிருந்து நீக்கி இருக்கிறார்கள். அவர் தேவைப்படும் போது எல்லாம் வெளியே அமர்ந்து இருக்கிறார், இந்திய அணியின் நன்மைக்காக சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications











