டெல்லி: கிரிக்கெட் வாரயித் தலைவர் பதவியிலிருந்து ஓரம் கட்டப்பட்ட சீனிவாசனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீனிவாசனால் முடக்கி வைக்கப்பட்டுள்ள பீகார் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆதித்யா வெர்மா, நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், உடனடியாக பீகார் மாநில கிரிக்கெட் நிர்வாகத்தைக் கவனிக்க ஒரு இடைக்கால குழுவை அமைக்க வேண்டும். பீகாருக்கான அங்கீகாரத்தை அண்டை மாநிலமான ஜார்க்கண்ட் மோசடியாக தட்டிப் பறித்து விட்டது. அதை ரத்து செய்ய வேண்டும். பீகார் மாநில இளம் கிரிக்கெட் வீரர்கள் புத்துயிர் பெற உதவ வேண்டும்.
ஊழல் இல்லாத இந்திய கிரிக்கெட் வாரியம் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் இதில் தலையிடாவிட்டால்யாராலும் இதைக் காப்பாற்ற முடியாது என்று கூறியுள்ளார் வெர்மா.