லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி, இங்கிலாந்து வெற்றிவாகை சூடியது.
223 ரன்களில் நியூசிலாந்தை ஆல்அவுட் செய்த இங்கிலாந்து 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. இந்த தோல்வி குறித்து நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் கூறுகையில், இங்கிலாந்து பவுலர்களே இந்த வெற்றிக்கு காரணம் என்றார். சரியான இடத்தில், சரியான அளவில் பந்து வீசி இங்கிலாந்து பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச் என்றபோதிலும், இங்கிலாந்து பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி நியூசிலாந்தை மடக்கியது குறிப்பிடத்தக்கது.