ராஜ்கோட் : இந்தியாவில் உள்ளூரில் நடத்தப்படும் 50 ஓவர் போட்டிகளில் பிரதானமானது விஜய் ஹசாரே தொடர். இந்த தொடரின் கால் இறுதிச் சுற்றில் மும்பையும் தமிழ்நாடு அணியும் ராஜ்கோட்டில் பலபரிட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
மும்பை அணியின் கேப்டனாக ரகானேவும் தமிழக அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக்கும் களமிறங்கினார்கள். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது.
