புனே : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளார் கேப்டன் விராட் கோலி.
இதையொட்டி பூனாவிற்கு தன்னுடைய மனைவி அனுஷ்கா மற்றும் மகளுடன் பயணம் மேற்கொண்டார் விராட் கோலி.
இந்நிலையில் விமானநிலையத்தில் எந்த பணியாளரின் துணையுமின்றி அனுஷ்கா சர்மா குழந்தையை தூக்கி செல்ல, பின்னால் விராட் கோலி அதிக பளுவுடன் கூடிய லக்கேஜை சுமந்தபடி செல்லும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் மற்றும் டி20 தொடரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி கொண்டுள்ளது. இதையடுத்து நாளை முதல் புனேவில் ஒருநாள் தொடர் துவங்கி நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக விராட் கோலி தன்னுடைய பயணத்தை துவக்கியுள்ளார்.
அனுஷ்கா ஷர்மா மற்றும் தன்னுடைய குழந்தை வமிகாவுடன் அவர் தனது பயணத்தை துவக்கியுள்ளார். ஒரு பணியாளரை கூட உதவிக்கு வைத்துக் கொள்ளாமல் அனுஷ்கா தன்னுடைய குழந்தையை சுமந்து செல்ல, விராட் கோலி அதிகப்படியான லக்ஜேஜை சுமந்தபடி செல்லும் இந்த புகைப்படம் விமானநிலையத்தில் எடுக்கப்பட்டுள்ளது. விராட் கோலி சாதாரண தந்தையை போல குழந்தைக்கான உபகரணங்களையும் சுமந்தபடி இந்த புகைப்படத்தில் காணப்படுகிறார்.