கொல்கத்தாவில் நாளை நடைபெறுகிறது
இந்திய கிரிக்கெட்டின் பெருமைமிகு வடிவமாக பார்க்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் மற்றும் பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். ஆண்டுதோறும் இவர்கள் ஏலம் மூலம் எடுக்கப்படும் நிலையில், அடுத்த ஆண்டிற்கான ஏலம் கொல்கத்தாவில் நாளை நடைபெறவுள்ளது.
13 வீரர்கள் தக்கவைப்பு
இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்காக அணியில் 13 வீரர்களை தக்க வைத்துள்ள ஆர்சிபி அணி, நாளைய ஏலத்தில் 27.90 கோடி ரூபாயுடன் களமிறங்க உள்ளது.
ரசிகர்களுக்கு விராட் கோலி வீடியோ செய்தி
கொல்கத்தாவில் ஐபிஎல் 2020க்கான ஏலம் நாளை நடைபெறவுள்ள நிலையில், அந்த அணியின் டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு விராட் கோலி வீடியோ ஒன்றின் மூலம் செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்.
விராட் கோலி கோரிக்கை
தனக்கும் ஆர்சிபி அணிக்கும் தொடர்ந்து ஆதரவளித்துவரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு அந்த வீடியோவில் பேசும் விராட் கோலி, நாளைய ஏலத்தின்போது ஆர்சிபியின் பின்னே ரசிகர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
நிர்வாக குழு சிறப்பான செயல்பாடு
ஆர்சிபியை வலுப்படுத்தும்வகையில், அணியின் நிர்வாக குழு, மைக் மற்றும் சைமன் உள்ளிட்டவர்கள் மிக சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் விராட் தெரிவித்துள்ளார்.
|
விராட் கோலி உறுதி
ஆர்சிபி அணி ஏற்கனவே வலிமையாக உள்ள போதிலும், அதன் அடிப்படைகளை வலுவாக்கி, அணியை மேலும் வலிமை படுத்தும் முயற்சி தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த விராட் கோலி, இதன்மூலம் வரும் ஐபிஎல் தொடர் அணிக்கு மேலும் சிறப்பாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.