இந்தியா ஒரு பக்கம் ஆல்அவுட்.. கோஹ்லி மறுபக்கம் புதிய உச்சம்.. ஆண்டில் அதிக ரன் குவித்த வீரரானார்!
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்தியா 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த ஆட்டத்தின்போது, இந்த ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை கேப்டன் விராட் கோஹ்லி பெற்றார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 107 ரன்களுக்கு சுருண்டது.

இந்த போட்டியின்போது கேப்டன் விராட் கோஹ்லி 23 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், இந்த ஆண்டில், சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரரானார் கோஹ்லி. கோஹ்லி இதுவரை 25 இன்னிங்ஸில் 1,404 ரன்கள் எடுத்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவ் 1,389 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் ஜோ ரூட் 1,338 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இந்தியாவின் ஷிகார் தவான் 1,055 ரன்களுடன் 5வது இடத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications