
26வது ஓவரில்
அது இந்தியாவின் 26வது ஓவர். விராத் கோஹ்லி பேட் செய்து கொண்டிருந்தார். அவருக்கு ஸ்டோக்ஸ் பந்து வீசினார். அப்போது கோஹ்லி அவுட்டாகி விட்டார். அவர் எடுத்திருந்த ரன்கள் 40.

சும்மா இருக்காத ஸ்டோக்ஸ்
அவுட் ஆனதைத் தொடர்ந்து கோஹ்லி பெவிலியனுக்குத் திரும்பத் தொடங்கினார். அப்போது ஸ்டோக்ஸ் கோஹ்லியைப் பார்த்து ஏதோ சொன்னார். இதைக் கேட்டதும் கோபமடைந்த கோஹ்லி அப்படியே நின்றார். பின்னர் தனது பேட்டை ஸ்டோக்ஸை நோக்கி உயர்த்தி சில நிமிடங்கள் முறைத்துப் பார்த்தார். அவரும் ஸ்டோக்ஸை நோக்கி ஏதோ சொன்னார்.

கோபத்துடன் நடை
இதையடுத்து நடுவர்கள் குறுக்கிட்டு இருவரையும் அமைதிப்படுத்தினர். பின்னர் கோஹ்லி திரும்பிச் சென்றார். ஆனால் அவர் சென்ற விதத்திலேயே, ஸ்டோஸ்க் சொன்னது அவரை டென்ஷன்படுத்தியிருந்தது என்பதை வெளிப்படுத்துவதாக இருந்தது.

இங்கிலாந்து கேப்டனுக்கு நடுவர்கள் எச்சரிக்கை
இந்த சம்பவத்திற்குப் பின்னர் இரு நடுவர்களும், இங்கிலாந்து கேப்டன் குக் மற்றும் ஸ்டோக்ஸை அழைத்து சில வார்த்தைகளைக் கூறி எச்சரித்தனர். பின்னர் ஆட்டம் தொடர்ந்தது.

ஸ்டோக்ஸ் மீதுதான் தவறு
இந்த விவகாரத்தில் ஸ்டோக்ஸ் மீதுதான் தவறு இருப்பது டிவி காட்சிகளில் தெளிவாகத் தெரிகிறது. அவர்தான் எதையோ பேசி கோஹ்லியை வம்பிக்கிழுத்தார். ஆனால் அவர் என்ன சொன்னார் என்பது தெரியவில்லை.

அடித்து நொறுக்கிய இந்தியா
இப்போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் துவைத்துக் காயப்போட்டு விட்டது என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications