
விராட் கோலி சாதனை
அவர்களின் ஆசையை விராட் கோலி நிறைவேற்றி வைத்தார். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய விராட் கோலி தூண் போல நிலைத்து நின்று சீரான இடைவெளியில் ரன் சேர்த்தார். 87 பந்துகளை சந்தித்த அவர் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 113 ரன்களை விளாசினார். இதன் மூலம் 1214 நாட்களுக்கு பிறகு இந்திய மண்ணில் கோலி சதத்தை அடித்தார்.

பிரமாண்ட சாதனை
இந்நிலையில் இந்த சதத்தின் மூலம் சச்சினின் சாதனை தகர்க்கப்பட்டுள்ளது. அதாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் அதிக சதம் அடித்த வீரர் என்ற வீரராக சச்சின் (20) இருந்தார். ஆனால் இன்று கோலியும் 20வது சதத்தை அடித்து அவரை சமன் செய்தார். இந்த சாதனையை சச்சின் 164 போட்டிகளில் செய்த சூழலில், கோலி வெறும் 101 போட்டிகளிலேயே செய்துவிட்டார்.

சச்சினையே முந்தினார்
இதே போல இலங்கை அணிக்கு எதிராக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சினை முந்தியேவிட்டார் விராட் கோலி. சச்சின் டெண்டுல்கர் 8 சதங்களை அடித்திருந்தார். ஆனால் நட்சத்திர வீரர் விராட் கோலி இன்று 9வது சதத்தை பூர்த்தி செய்து ஜாம்பவான் சச்சினையே முந்திவிட்டார்.

இன்னும் 5 சதம்
விராட் கோலி இன்னும் 5 சதங்களை அடித்தால் மற்றொரு ரெக்கார்ட் காத்துள்ளது. அதாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் 49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி தற்போது 45 சதங்களை அடித்துள்ளார். இன்னும் 4 சதங்களை அடித்துவிட்டால் போதும், அதிக சதம் அடித்தவர் என்ற பெருமையை கோலி பெற்றுவிடுவார்.


Click it and Unblock the Notifications