
குவாரண்டைன்
லண்டன் சென்று இறங்கிய இந்திய வீரர்கள், சுவாத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதான ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கமாக இங்கிலாந்தில் 14 நாட்கள் மிக கண்டிப்பான குவாரண்டைனில் வீரர்கள் இருக்க வேண்டும். ஆனால் ஏற்கனவே இந்திய வீரர்கள் இந்தியாவில் குவாரண்டைனில் இருந்ததால் இங்கிலாந்தில் 10 நாட்கள் மட்டும் குவாரண்டைன் இருக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குவாரண்டைன் விதிமுறைகள்
இது மிக முக்கியமான போட்டி என்பதால் இந்த 10 நாள் குவாரண்டைனில் 3 நாட்கள் மட்டும் கடும் குவாரண்டைனில் இருந்ததால் போதும். 4வது நாளில் இருந்து பயிற்சியை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிலும் ஒரு முக்கிய நிபந்தனை உள்ளது. அதாவது அந்த 3 நாட்களிலும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். இதில் நெகட்டீவ் என முடிவு வந்தால் மட்டுமே வீரர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

நாளை முதல் பயிற்சி
இந்நிலையில் வீரர்கள் பயிற்சியை மேற்கொள்ள மைதானம் தயார் நிலையில் உள்ளது. அநேகமாக அவர்கள் நாளை முதல் தங்களது பயிற்சியை மேற்கொள்வார்கள் எனக்கூறப்படுகிறது. இதுகுறித்து பிசிசிஐ-ம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளது.

தீவிர பயிற்சி
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக நியூசிலாந்து முன்கூட்டியே இங்கிலாந்து சென்றடைந்து, அங்கு அந்நாட்டுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஆனால் இந்திய அணிக்கு வலைப்பயிற்சி மட்டுமே உள்ளது. எனவே இதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள தீவிரமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











