
5ம் தேதி துவக்கம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் அடுத்தடுத்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் முதலில் ஆடவுள்ள டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகள் சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதையொட்டி இங்கிலாந்து மற்றும் இந்திய வீரர்கள் சென்னையில் குவாரன்டைனில் உள்ளனர்.

மீண்டும் போட்டிகளில் பங்கேற்பு
கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் பகலிரவு போட்டியில் மட்டும் பங்கேற்றுவிட்டு தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்பினார் விராட் கோலி. இந்நிலையில் மீண்டும் அவர் இந்த தொடரின்மூலம் போட்டிகளில் விளையாடவுள்ளார்.

ஜோஸ் பட்லர் ஆதங்கம்
இதனிடையே, விராட் கோலி மீண்டும் அணியில் இணைந்துள்ளது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய சவால் என்று இங்கிலாந்து அணியின் குறைந்த ஓவர்கள் போட்டிகளின் துணை கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். மேலும் சிறிது காலம் கிரிக்கெட் விளையாடாமல் இருந்ததால், மிகுந்த தீவிரத்துடன் அவர் அணியை வழிநடத்துவார் என்றும் பேட்டிங் செய்வார் என்றும் பட்லர் கூறியுள்ளார்.

ஸ்பின்னர்களுக்கு சவால்
தொடர்ந்து பேசிய அவர் தனது அணியின் கேப்டன் ஜோ ரூட் இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும் ஸ்பின்னர்களை மிகச்சிறப்பாக எதிர்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். ஸ்பின்னர்களின் பந்துளில் அதிகமாக ஸ்கோர் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இலங்கை -இங்கிலாந்து தொடரில் 2க்கு 0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வென்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











