பூனாவில் நடக்கும் 3வது போட்டி
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் ஆண்டின் முதல் சர்வதேச டி20 போட்டித்தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
டிவிட்டரில் பகிர்வு
இலங்கையுடனான 3வது போட்டியையொட்டி தீவிர பயிற்சியில் ஈடுபட்ட கேப்டன் விராட் கோலி, தான் மைதானத்தில் பந்து வீச்சை எதிர்கொள்ளும் புகைப்படம் ஒன்றை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
|
விராட் கோலி பதிவு
மைதானத்தில் தான் ஆடும் புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட கோலி, தன்னுடைய விருப்ப உணவு சோலே பட்டூரே மற்றும் எதிரணி வீசும் பந்து இரண்டிற்கும் ஒரேமாதிரியான கவனம் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.
பந்துவீச்சிலும் கவனம்
தன்னுடைய உடல்நலத்திலும் டயட்டிலும் மிகுந்த கவனம் கொண்டவர் விராட் கோலி. ஆனால் அவருக்கு மிகவும் பிடித்தமான உணவு சோலே பட்டூரே என்று பல சமயங்களில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தனக்கு பிடித்தமான சோலே பட்டூரே மற்றும் பந்துவீச்சு இரண்டையும் ஒப்பிட்டு அவர் பேசியுள்ளார். சிரிப்பு எமோஜியை போடவும் அவர் மறக்கவில்லை.