சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக கேப்டன் விராட் கோலி சென்னையில் உள்ளார்.
ஐசிசி ஒருநாள் போட்டிகளின் தரவரிசை பட்டியலில் 870 புள்ளிகளுடன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.
சர்வதேச அளவில் தொடர்ந்து 1500 நாட்களாக இந்த சாதனையுடன் அவர் தொடர்ந்து வருகிறார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக கேப்டன் விராட் கோலி சென்னையில் உள்ளார். தொடர்ந்து அணி வீரர்களுடன் வலைப்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். முதலில் டெஸ்ட் தொடர் தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இரு அணிகளும் மோதவுள்ளன.
கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி கோப்பையை பறிகொடுத்தது. ஆயினும் ஐசிசி ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து விராட் கோலி 870 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அது மட்டுமின்றி இந்த சாதனையை தொடர்ந்து 1500 நாட்களாக தொடர்ந்து வருகிறார். விராட் கோலி சிறப்பான வீரர் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.