கவுஹாத்தியில் துவக்கம்
ஆண்டின் முதல் தொடராக இந்தியா மற்றும் இலங்கை இடையில் சர்வதேச டி20 போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி கவுஹாத்தியில் இன்று நடைபெறுகிறது.
தயாராகவுள்ள அணியினர்
கவுஹாத்தியின் பாரஸ்பாரா மைதானத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு இந்த போட்டிக்கான டாஸ் போடப்படவுள்ளது. தொடர்ந்து 7 மணிக்கு போட்டி துவங்கவுள்ளது.
இலங்கையை வெல்ல தீவிரம்
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான கடந்த ஆண்டின் இறுதி தொடரில் இந்தியா வெற்றி கொண்ட நிலையில், இந்த ஆண்டின் முதல் தொடரிலும் வெற்றி பெற முனைப்புடன் உள்ளது. இதையடுத்து கவுஹாத்தியில் இந்திய அணியினர் தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.
கேப்டன் விராட் கோலிக்கு காயம்
கவுஹாத்தியின் பாரஸ்பாரா மைதானத்தில் நேற்று இந்திய அணியினர் தீவிர பயிற்சி மேற்கொண்ட நிலையில், வேகமாக அடிக்கப்பட்ட பந்து ஒன்று விராட்கோலியின் இடதுகை சுண்டுவிரலை பதம் பார்த்தது.
உடனடி சிகிச்சையளித்த பிசியோ
இதையடுத்து உடனடியாக மைதானத்திற்கு வந்த பிசியோ நிதின் படேல், விராட் கோலிக்கு ஸ்ப்ரே அடித்து சிகிச்சை மேற்கொண்டார்.
இந்திய அணி அபாரம்
கடந்த 12 ஆண்டுகளில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் இலங்கையை 16 போட்டிகளில் வென்றுள்ளது. கடந்த 2014ல் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை இந்தியாவை வெற்றி கொண்டது குறிப்பிடத்தக்கது.