
அவுட் கொடுத்த நடுவர்
விராட் கோஹ்லி அதை அடிக்க முயன்றார். ஆனால் பந்து பேட்டில் படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது. தென் ஆப்பிரிக்கா வீரர்கள் அவுட்டிற்காக, அப்பீல் கேட்க நடுவரும் உடனே அவுட் கொடுத்துவிட்டார்.

அம்பயருக்கு திட்டு
இதனால் கடும் கோபம் அடைந்த விராட் கோஹ்லி ஆடுகளத்தை விட்டு வெளியேறாமல் சிறிது நேரம் நின்றபடி ஏதோ திட்டுவதை போல முனகிக்கொண்டருந்தார்.

நோ-பால் சந்தேகம்
இந்நிலையில் தாஹிர் கிரீசுக்கு வெளியில் வந்து நோபாலாக அந்த பந்தை வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், சோதித்து பார்ப்பதற்காக மைதான நடுவர் மூன்றாவது நடுவரை நாடினார். 3வது நடுவர் அதை நோ-பால் என்று அறிவித்தார். இதனால் விராட் கோஹ்லி அவுட்டில் இருந்து தப்பினார்.

எதற்காக நோ-பால்?
ஆனால் டிவியில் ரிப்ளே பார்த்தவர்களுக்கு, தாஹிர் கிரீசுக்கு உள்ளே காலை வைத்திருந்தது தெரிந்தது. ஆனால் பந்து பேட்டில் படவில்லை என்பதும் தெரிந்தது. எனவே, 3வது நடுவர் நோ-பால் என்று அறிவித்தது பேட்டில் படவில்லை என்பதற்காக இருக்கலாம் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











