சென்னை : இந்தியா -இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் முதல் துவங்கி நடைபெறவுள்ளது.
இதையொட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் சென்னை சிதம்பரம் மைதானத்தில் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி அற்புதமான ஆல்-ரவுண்டராக திகழ்வதாக இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் ஜோ ரூட் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை மறுதினம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் துவங்கி நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கென இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த போட்டியில் ஜோ ரூட் தலைமையலான இங்கிலாந்து அணி பங்கேற்று விளையாடவுள்ளது. இந்திய மண்ணில் இந்திய அணியை வெற்றி கொள்ளும் தீவிரம் அந்த அணியிடம் காணப்படுகிறது. இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி அற்புதமான ஆல்-ரவுண்டருக்கான திறமையை கொண்டுள்ளதாக ஜோ ரூட் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய ஆட்டம் நம்ப முடியாததாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.