
2 ஆண்டுகள்
ஆனால் அந்த ரன் மிஷினுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அவருடைய 71வது சதம் இன்று வரும், நாளை வந்துவிடும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதற்கு காரணம், கோலியின் பலமே ஒருநாள் போட்டி தான். அதில் கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா போதிய ஆட்டங்களில் விளையாடவில்லை.

புதிய மைல்கல்
விராட் கோலி தொடர்ந்து ஒரு 10 ஒருநாள் போட்டியில் விளையாடினால், அவர் தனது பழைய ஃபார்மை மீட்டு எடுப்பார். இந்த நிலையில், விராட் கோலி ஒரு புதிய சாதனை மைல்கல்லை எட்ட போகிறார். ஆம், இந்தியாவில் நாளை தனது 100வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார் விராட் கோலி.

5வது இந்திய வீரர்
இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 164 போட்டிகள், தோனி 127 போட்டிகள், அசாரூதீன் 113 போட்டிகள், யுவராஜ் சிங் 108 போட்டிகளில் விளையாடி உள்ளனர். இந்த மைல்கல்லை எட்டும் 5வது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி எட்ட உள்ளார். இதனால் இந்த விசேஷ நாளில் தனது 71வது சதத்தை பூர்த்தி செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Recommended Video

புள்ளி விவரம்
இந்தியாவில் 99 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி இதுவரை 5002 ரன்கள் அடித்துள்ளார். இதில் 19 சதம், 25 அரைசதம் அடங்கும். கோலி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 40 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2243 ரன்கள் அடித்துள்ளார். இதில் 9 சதங்கள் அடங்கும். மேற்கிந்திய திவுகளை எப்போதும் சுலபமாக டீல் செய்யும் கோலி நாளைக்கு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தருவார் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











