
அதிரடி ஆட்டம்
இலங்கைக்கு எதிரான நேற்றைய போட்டியில் விராத் கோஹ்லி 47 பந்துகளில் 56 ரன்களைக் குவித்தார். அதேபோல யுவராஜ் சிங்கும் 18 பந்துகளில் 35 ரன் குவித்தார். இருவரும் சேர்ந்து இந்தியாவின் வெற்றியை எளிதாக்கினர்.

டோணியுடன் இணைந்து
நேற்றைய போட்டியில் வெற்றி பெற இந்தியாவுக்கு 14 ரன்கள் தேவைப்பட்டபோது, கோஹ்லியும், டோணியும் இணைந்து அதை எடுத்தனர்.

முதிர்ச்சி வந்திருச்சு
போட்டிக்குப் பின்னர் டோணி செய்தியாளர்களிடம் பேசுகையில், கோஹ்லி நல்ல முதிர்ச்சியான வீரராக மாறியுள்ளார். தனது ஆட்டத்தில் மேலும் மெருகேற்றியுள்ளார்.

சிறப்பாக ஆடுகிறார்
கடந்த காலங்களில் கற்றுக் கொண்ட அனுபவங்கள் மூலம் தனது ஆட்டத்திறனை மேம்படுத்தியுள்ளார். யார் டார்கெட், எது டார்கெட், நமது பலம் என்ன என்பதை மிகத் தெளிவாக அறிந்து வைத்து ஆடுகிறார்.

தெரியாத இடத்தில் கால் வைக்காமல்
நமது பலம் என்ன என்று தெரியாமல், நமக்கு பலம் இல்லாத பகுதிகளில் கால் வைப்பது அபாயகரமானதாகும். அதை கோஹ்லி ஒருபோதும் செய்வதில்லை. அந்த வகையில் அவர் அருமையான வீரராக மாறியுள்ளார் என்றார் டோணி.


Click it and Unblock the Notifications