எல்லைப் பாதுகாப்புப் படையின் 'அம்பாசடர்' ஆனார் கோஹ்லி
டெல்லி: எல்லைப் பாதுகாப்புப் படையின் பிராண்ட் அம்பாசடராக விராத் கோஹ்லி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பு நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
அர்ஜூனா விருது பெற்றுள்ள கோஹ்லிக்கு, இந்த விழாவின்போது எல்லைப் பாதுகாப்புப் படையின் அடையாளங்களை, மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் அளி்த்தார்.

இதுதான் முதல் தடவை
எல்லைப் பாதுகாப்புப் படை, தனக்கென ஒரு பிராண்ட் அம்பாசடரை உருவாக்கியிருப்பது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையாகும்.

தலையில் தொப்பி
தலையில் அணியும் தொப்பியும், எல்லைப் பாதுகாப்புப் படையின் லோகோவும் கோஹ்லிக்கு அளிக்கப்பட்டன. அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார் கோஹ்லி.

எல்லையி்ல்லாத பெருமித உணர்வு
நாட்டின் 6000 கிலோமீட்டர் எல்லைப் பகுதியை காக்கும் படை வீரனைப் போன்ற உணர்வு எனக்கு வருகிறது என்றார் கோஹ்லி.

வீரர்களுடன் உரையாடல்
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், அதிகாரிகளுடனும் கோஹ்லி உரையாடி மகிழ்ந்தார். மேலும் தனக்கு விழாவின்போது கொடுக்கப்பட்ட வரவேற்பு ஆச்சரியம் தந்ததாகவும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications