
இலங்கை வெற்றியைத் தொடர்ந்து
இலங்கைக்கு சமீபத்தில் சென்ற கோஹ்லி தலைமையிலான அணி டெஸ்ட் தொடரை வென்றது. 22 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி இலங்கையில் பெற்ற டெஸ்ட் தொடர் வெற்றி இது. எனவே கோஹ்லிக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதல்
அடுத்த மாதம் இந்தியாவுக்கு வருகிறது தென் ஆப்பிரிக்க அணி. அந்தத் தொடரில் பங்கேற்பதற்கான இந்திய அணித் தேர்வு செப்டம்பர் 15ம் தேதி நடைபெறவுள்ளது.

ஒரு நாள் போட்டிக்கும் கேப்டனாக்கப்படுகிறார் கோஹ்லி
இந்தத் தொடரில் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமல்லாமல் ஒரு நாள் தொடருக்கும் கோஹ்லியையே கேப்டனாக்க இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புகிறதாம்.

டுவென்டி 20 மட்டும் டோணி
டோணியை டுவென்டி 20 அணிக்கு கேப்டனாக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாம். அதை மட்டும் அவர் பார்த்துக் கொண்டால் போதும் என வாரியம் கருதுகிறதாம்.

ஏன் அது மட்டும்
டுவென்டி 20 அணிக்கும் கூட கோஹ்லியையே கேப்டனாக்க முதலில் யோசிக்கப்பட்டதால். ஆனால் உலகக் கோப்பை டுவென்டி 20 தொடர் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளதால் டோணியைத் தூக்கினால் பெரிய சிக்கலாகி விடும் என்பதால் அதில் மட்டும் அவரை விட்டு வைக்கிறார்களாம்.

டோணி என்ன சொல்வார்
டோணி கடந்த ஜூன் மாதத்தில் டாக்காவில் நடந்த ஒரு நாள் தொடருக்குப் பின்னர் கிரிக்கெட் ஆடாமல் உள்ளார். ஓய்வில் உள்ளார். அவர் கோஹ்லியை கேப்டனாக்க ஆதரவு தருவாரா என்பது தெரியவில்லை.

அக்டோபர் 2 முதல்
தென் ஆப்பிரிக்க அணி அக்டோபர் 2ம் தேதி முதல் 72 நாள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறது. 4 டெஸ்ட் போட்டிகள், 5 ஒரு நாள் போட்டிகள், 3 டுவென்டி 20 போட்டிகளில் அது இந்தியாவுடன் ஆடவுள்ளது.


Click it and Unblock the Notifications











