Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி உள்ளூர் போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா? டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் கருத்து

இந்திய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வரிசையாக இருக்கும் நிலையில், பணிச்சுமை அனுமதித்தால் இந்த சீசனில் விராட் கோலி டெல்லி அணிக்காக விளையாட வாய்ப்புள்ளது என்று டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ரோஹன் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி தனது சொந்த மாநில அணிக்காக விளையாடுவதற்கு எப்போதும் கதவுகள் திறந்தே இருக்கும் என்று கூறினார். சர்வதேச போட்டிகள் மற்றும் பணிச்சுமையை கோலியால் சரியாக நிர்வகிக்க முடிந்தால், இந்த சீசனில் அவர் நிச்சயமாக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவார் என்றும் அவர் கூறினார்.

Virat Kohli

கடந்த ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை தொடரில் டெல்லி அணிக்காக களமிறங்கிய கோலி, ஆந்திராவுக்கு எதிரான ஆட்டத்தில் 101 பந்துகளில் 131 ரன்கள் விளாசி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஒரு வாரத்தில் 80 ஓவர்கள்.. ஓய்வால் உடல் மந்தமாகிவிட்டது.. இப்போது சுறுசுறுப்பாகி விட்டேன்- சிராஜ்

ஒரு வாரத்தில் 80 ஓவர்கள்.. ஓய்வால் உடல் மந்தமாகிவிட்டது.. இப்போது சுறுசுறுப்பாகி விட்டேன்- சிராஜ்

ஒப்பந்த வீரர்கள் அனைவரும் உள்நாட்டு போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற பிசிசிஐ-யின் விதிமுறைக்கு பிறகு, சர்வதேச போட்டிகள் இல்லாத காலங்களில் டெல்லி அணிக்காக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் விளையாட கோலி தயாராக இருப்பதாக கடந்த ஆண்டு டிடிசிஏ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இந்த ஆண்டின் விஜய் ஹசாரே கோப்பை தொடர் டிசம்பர் 14 அன்று தொடங்குகிறது. ஆனால், அதே நேரத்தில் டிசம்பர் 13 முதல் 19 வரை இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளதால், கோலி இந்த உள்நாட்டு தொடரில் விளையாடுவது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது.

"இது அவருடைய சொந்த மாநில சங்கம். நாங்கள் அனுமதிப்பதா என்ற கேள்விக்கே இடமில்லை. இந்த மாநிலம் எனக்கு எவ்வளவு சொந்தமோ, அதே அளவு அவருக்கும் சொந்தம். டெல்லி அணிக்காக விளையாடுவதில் அவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பு அளப்பரியது" என்று ரோஹன் ஜெட்லி இந்தியா டுடே ஊடகத்திடம் பேசும்போது குறிப்பிட்டார். மேலும் அவர், "சர்வதேச போட்டிகள் மற்றும் பணிச்சுமை மேலாண்மையைக் கருத்தில் கொண்டு, அவர் எப்போது ஓய்வாக இருக்கிறாரோ, அப்போது நிச்சயமாக மீண்டும் டெல்லி அணிக்காக விளையாடுவார்" என்றும் கூறினார்.

செப்டம்பர் 27 முதல் தொடங்க உள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராட் கோலி விளையாட உள்ளார். அதன் பிறகு, நவம்பர் மாதத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், தொடர்ந்து டிசம்பரில் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாட உள்ளார். இதனால் உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர் விளையாடுவது மிகவும் சவாலானதாக இருக்கும்.

26 வயது பவுலரிடம் கிளீன் போல்ட் ஆன சுப்மன் கில்.. தெறித்து சிதறிய ஸ்டம்புகள்

Also Read

26 வயது பவுலரிடம் கிளீன் போல்ட் ஆன சுப்மன் கில்.. தெறித்து சிதறிய ஸ்டம்புகள்

முன்னதாக 2025 ஆம் ஆண்டில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, 13 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக டெல்லி அணிக்காக ரஞ்சி கோப்பை தொடரில் கோலி விளையாடினார். அதே ஆண்டின் இறுதியில், அவர் டெல்லி அணிக்காக இரண்டு விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளிலும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, September 11, 2026, 17:28 [IST]
Other articles published on Sep 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+