உறுதியான பரிந்துரை
அதை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது விளையாட்டு அமைச்சகத்துக்கு இவர்கள் இருவரின் பெயர்களே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் கோலியின் பெயர் கடந்த 2016ஆம் ஆண்டில் தேர்வுக் குழுவினரால் விவாதிக்கப்பட்டு, பின் நீக்கப்பட்டது. இந்த முறை அவரது பெயரை பரிந்துரை செய்துள்ளனர்.
ஏன் கோலிக்கு?
கோலி தற்போது ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார். மேலும், தன் உச்சகட்ட பார்மில் இருக்கிறார். இதுவே, அவரது பெயரை பரிந்துரை செய்ய காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
2 கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே
இதுவரை கேல் ரத்னா விருது பெற்ற கிரிக்கெட் வீரர்கள் இருவர் மட்டுமே. ஒருவர் சச்சின் டெண்டுல்கர். மற்றொருவர், மகேந்திர சிங் தோனி. இந்த முறை அமைச்சகத்தால் ஒப்புதல் செய்யப்பட்டால், மூன்றாவது கிரிக்கெட் வீரராக விராட் கோலி கேல் ரத்னா விருது வெல்வார்.
யார் இந்த மீராபாய் சானு?
மீராபாய் சானு இந்த பளுதூக்கும் வீராங்கனை ஆவார். அவர் சென்ற ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் மற்றும் இந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்கப் பதக்கங்கள் வென்று சாதித்துள்ளார். காயம் காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவில்லை.