
வெற்றிக்காக பாடுபடுவேன்
அனைத்து விஷயங்களுக்கும் ஒரு காலம் உள்ளது. அப்படி தான் என் கேப்டன் பதவிக்கும். கேப்டனாக நான் என்ன செய்தேன் என்று எனக்கு தெரியும். தற்போது வாழ்க்கையின் அடுத்த பக்கத்துக்கு செல்கிறேன், இனி அணியில் பேட்ஸ்மேனாக தொடர்வேன். அணியின் வெற்றிக்காக பாடுபடுவேன். அணியின் வெற்றிக்கு உதவிய திருப்தி எனக்கு கிடைக்கும். அது தான் எனக்கு முக்கியம்.

கேப்டனாக யோசிப்பேன்
தலைவனாக நீடிக்க கேப்டனாக தான் இருக்க வேண்டும் என்பது அல்ல. கேப்டனாக இருப்பதற்கு முன்பே, நான் ஒரு கேப்டன் போல தான் யோசிப்பேன், செயல்படுவேன். எனக்கு நான் தான் தலைவன். எனக்கு இருக்கும் பொறுப்பை உணர்ந்து செய்ல்படுவேன். தோனி கேப்டனாக இருக்கும் போது அணியில் எப்படி இருந்தேனோ, அதே போல் தான் இப்போதும் இருப்பேன்.

இயற்கையாக நடந்தது
கேப்டனாக தோனி இருக்கும் போது , அவர் தலைவன் என்ற உணர்வோடு இருக்க மாட்டார். போட்டி தொடர்பான யுத்திகள், தகவல்களை தெரிவிக்கும் நபராக தான் தோனி செயல்படுவார்.அணியை நான் வழிநடத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை அவர் உணர்ந்து தான் எனக்கு இந்த பதவியை தோனி வழங்கினார். இது அனைத்தும் இயற்கையாக நடந்தது.

விலகியது ஏன்?
தற்போது நானும், அணியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எது தேவை என்பதை கருத்தில் கொண்டே சரியான நேரத்தில் கேப்டன் பதவியை விட்டு விலகினேன். அணிக்கு ஒரு புதிய பாதை தேவைப்பட்டது. புதிய சிந்தனைகளுடைய, ஆக்கப்பூர்வமான விஷயங்களை மேற்கொள்ள புதிய நபர் தேவைப்பட்டார். இதனால் தான் நான் விலகினேன். எப்போதும் போல் இந்திய அணிக்காக விளையாடி ரன் குவிப்பேன், அது தான் என் பணி.


Click it and Unblock the Notifications











