டெல்லி: கடும் நெருக்கடி ஏற்படும் சமயங்களில் கூட சிறப்பாகவும், சீரிய வகையிலும் விளையாடுவதில் சச்சின் டெண்டுல்கரை விட விராத் கோஹ்லிதான் "பெஸ்ட்" என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் கூறியுள்ளார்.
இந்திய டெஸ்ட் கேப்டன் விராத் கோஹ்லிக்கு உள்ளூர் ஆட்டக்காரர்கள் மட்டுமல்லாமல் கடல் கடந்து வெளிநாடுகளிலிருந்தும் கூட பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் இம்ரான் கான், கோஹ்லியைப் பாராட்டியுள்ளார்.
சச்சினை விட கோஹ்லி பெஸ்ட் என்றும் அவர் புகழ்ந்து தள்ளியுள்ளார். நெருக்கடியான நேரங்களை சச்சினை விட கோஹ்லி சிறப்பாக கையாளுவதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து இம்ரான் கான் கூறியுள்ளதாவது: