
சூர்யகுமார் யாதவ்
32 பந்துகளில் அரைசதம் அடித்திருந்த சூர்யகுமார், அடுத்த 17 பந்துகளில் சதம் விளாசி இந்திய அணியின் ஸ்கோரை எங்கேயோ எடுத்து சென்றார். அதுமட்டுமல்லாமல் இந்தப் போட்டியில் 51 பந்துகளை எதிர்கொண்ட சூர்யகுமார் யாதவ் 111 ரன்களை விளாசினார். அதேபோல் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் 11 எக்ஸ்ட்ராஸையும் வீசினார். இதனை கழித்துவிட்டு பார்த்தோமானால், இந்திய பேட்ஸ்மேன்கள் 69 பந்துகளை சந்தித்து, 69 ரன்களை மட்டுமே எடுத்துள்ளனர்.

சூர்யாவின் சாதனை
இதனைத் தொடர்ந்து இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சாளால் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தாலும், சூர்யகுமார் யாதவின் ஆட்டமே களத்தில் திருப்புமுனையாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் ஒரே ஆண்டில் 7வது முறையாக டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.

வீடியோ கேம் இன்னிங்ஸ்
இந்த நிலையில் சூர்யகுமார் ஆட்டம் பற்றி இந்திய ஜாம்பவான் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், தான் ஏன் உலகின் சிறந்த டி20 பேட்ஸ்மேன் என்பதை அனைவருக்கும் நிரூபித்து வருகிறார். சூர்யகுமாரின் ஆட்டத்தை நேரலையில் பார்க்கவில்லை. ஆனால் இது அவருடைய மற்றொரு வீடியோ கேம் இன்னிங்ஸ் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று கிண்டலாகவும், உண்மையாகவும் பதிவிட்டுள்ளார்.

"கடவுள்" விராட் கோலி
ஒரு காலத்தில் கிரிக்கெட்டின் கடவுள் இந்தியாவுக்காக மூன்றாவது இடத்தில் ஆடி வருவதை பார்க்கிறேன் என்று விராட் கோலி பற்றி சூர்யகுமார் பதிவிட்டிருப்பார். ஆனால் இப்போது யாரை கடவுல் என்று சூர்யா கூறினாரோ, அவரே உலகின் தலைசிறந்த டி20 பேட்ஸ்மேன் என்று சூர்யகுமாரை பாராட்டியுள்ளார்.

மகிழ்ச்சி
விராட் கோலியின் பாராட்டு குறித்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், விராட் கோலியுடன் பேட்டிங் செய்யும் போது மகிழ்ச்சியாக இருக்கும். கொஞ்சம் ஜாலியாகவும் இருக்கும். அவரின் பாராட்டு மிகப்பெரியது. எனது ஆட்டத்தை வரும் காலத்தில் மேலும் துல்லியமாக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











