
சர்ச்சைகள்
இதனையடுத்து இந்த விவகாரம் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் எதிரொலித்தது. இந்திய அணி வரும் டிசம்பர் 16ம் தேதியன்று தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதற்காக அனைத்து வீரர்களும் பயோ பபுளுக்குள் நுழைந்துவிட்ட போதும், விராட் கோலி வரமுடியாது என்பது போல உள்ளார். மேலும் ஒருநாள் போட்டி தொடரிலும் பங்கேற்க போவதில்லை எனத் தகவல் வெளியானது.

பிடிவாத முடிவுகள்
அதாவது ரோகித் சர்மா கேப்டனாக செயல்படபோகும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதே போல விராட் கோலி கேப்டனாக செயல்படும் டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா வெளியேறியுள்ளார். காயத்தை அவர் காரணமாக கூறினாலும், இருவருக்குள் இருக்கும் பிரச்சினை வெளிப்படையாக தெரிகிறது.

கோலியின் விளக்கம்
இந்நிலையில் இந்த விவகாரத்தில் விராட் கோலி முதல் முறையாக வாய் திறந்துள்ளார். இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், நான் நிச்சயம் ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுவேன், எப்போதும் இந்திய அணிக்காக இருப்பேன் என கூறியுள்ளார். கேப்டன்சி குறித்து வெளியான பல்வேறு தகவல்கள் முற்றிலும் பொய்யானது, இந்த சர்ச்சைகள் குறித்து அவர்கள்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

ஏன் வாய் திறக்கவில்லை
டெஸ்ட் அணியை தேர்வு செய்த போது, என்னிடம் ஒருநாள் அணியின் கேப்டன்சி மாற்றம் குறித்து தெரிவிக்கப்பட்டது. நான் அப்போதே சம்மதம் என்று கூறிவிட்டேன். அதன்பிறகும் கூட பிசிசிஐ அதிகாரிகள் கூட நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளேன். எனவே அந்த விவகாரம் அப்போதே முடிந்தது. இதனால் தான் நான் அதன் பிறகு எதையுமே பதிவு செய்யவில்லை என கோலி கூறினார்.


Click it and Unblock the Notifications