
முதல் இன்னிங்ஸ்
ஆடுகளத்தில் பந்தின் பவுன்ஸ் கொஞ்சம் மாறி மாறி இருந்தது. இதனால் பேட்டிங் செய்யும் போது கடும் கவனத்துடன் நின்று விராட் கோலி விளையாடினார். முதல் இன்னிங்ஸ் தனி ஆளாக நின்று விராட் கோலி இந்திய அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்த்த நிலையில் விராட் கோலி 44 ரன்கள் எடுத்த நிலையில் நடுவரின் தவறான முடிவால் ஆட்டமிழந்தார்.

முதல் முறை
இதனையடுத்து விராட் கோலிக்கு 2வது இன்னிங்சில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அப்போது விராட் கோலி தைரியமாக விளையாடி ரன்களை சேர்த்தார். 3 பவுண்டரிகளை அடித்த கோலி 20 ரன்கள் சேர்த்த போது இறங்கி வந்து அடிக்க முயன்று ஸ்டம்ப் அவுட் ஆனார். இதன் மூலம் விராட் கோலி தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக ஸ்டம்ப் அவுட் ஆனார்.

புதிய சாதனை
மேலும் இந்த இன்னிங்ஸ் மூலம் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 25 ஆயிரம் ரன்களை கடந்த 6வது வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய வீரர் என்ற சாதனையை கோலி படைத்தார். மேலும், இந்திய அணியை பொறுத்தவரை சச்சினுக்கு பிறகு 25 ஆயிரம் ரன்களை எட்டிய 2வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

டிராவிட் பாராட்டு
கோலியின் இன்னிங்ஸ் குறித்து பாராட்டிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், விராட் கோலி தற்போது பந்தை நன்றாக கணித்து வருவதாகவும், களத்தில் நிற்கும் போது மனதளவில் அமைதியாக இருப்பதாகவும் பாராட்டினார். இந்த இன்னிங்ஸ் மூலம் கோலிக்கு பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்று டிராவிட் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











