
வாமிகா கோலி
விராட் கோலிக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குழந்தை பிறந்தது. இதற்காக ஆஸ்திரேலிய தொடரை பாதியில் விட்டு வந்தார். இந்த நிலையில், தனது குழந்தையின் புகைப்படத்தை முகம் தெரியாத வகையில் விராட் கோலி வெளியிட்டார். அவருக்கு வாமிக்கா என்றும் பெயர் சூட்டினார். ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி இதுவரை தனது குழந்தையின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டியது இல்லை.

மைதானத்தில் வாமிகா
இந்த நிலையில், கேப் டவுனில் நேற்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் கோலி அரைசதம் அடித்து, இதனை தனது மகளுக்கு சமர்பிப்பதாக சைகையில் காட்டினார். அப்போது கோலியின் மனைவி அனுஷ்காவும், அவரது மகள் வாமிக்காவும் கேலரியில் நினறு கைத்தட்டி விராட் கோலியை உற்சாகப்படுத்தினர்

டிரெண்டிங்கில் கோலி
இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டது. விராட் கோலியின் மகளை முதல் முறையாக பார்த்த ரசிகர்கள் அவரது புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், விராட் கோலி ரசிகர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்

கோலி கோரிக்கை
அதில் ,நேற்று மைதானத்திற்கு வந்த எனது மகளின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. எதிர்பாராத நேரத்தில் என் மகளை வீடியோ எடுத்து விட்டார்கள். எனது தனிப்பட்ட காரணங்களால் இதனை நாங்கள் விரும்பவில்லை. ரசிகர்கள் வாமிக்காவின் புகைப்படத்தை பகிர வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். எங்களை புரிந்து கொண்டதற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். விராட் கோலியின் இந்த கோரிக்கை ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது,


Click it and Unblock the Notifications